கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

செவ்வாய், 29 மார்ச், 2011

விதியின் விளையாட்டுக்கு சான்று .



ஆனால் உண்மையில் விதியைப் படைத்ததே மதிதான் என்பதை நுட்பமாகச் சிந்திக்கையில் உணர்ந்து கொள்ளலாம்.



மொத்தத்தில் விதியை உருவாக்கிய மதியே அந்த விதியை மதியாது போகும்போது, அது அந்த மதிக்குதான் மேலும் சங்கடங்களை உருவாக்குகிறது. எத்தனை பலம்மிக்கதாக அந்த மதி இருப்பினும் விதிமுன்னே அது அடங்கித்தான் சென்றாக வேண்டும்.




விதியை மதியால் வெல்லலாம் என்பதெல் லாம் எல்லா இடத்துக்கும் பொருந்தாது. சில விதிவிலக்கான இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.



விதி எப்பொழுதுமே வலியது. அதற்கு தேவர், மானிடர், அசுரர் என்கிற பேதமெல்லாம் கிடையாது. அது தன் கடமையைச் செய்யத் தொடங்கி விட்டால் அதைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அதை திசை திருப்பவோ யாராலும் முடியாது. இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை ஒருவர்கூட அதை வென்றதில்லை. விதியைப் பற்றி சிந்திக்கையில் மதியின் நினைப்பு பலருக்கும் வரும். எதற்கு இருக்கிறது மதி? மதியால் ஆகாத தும் உண்டா... விதி விதி என அழைப்பவர்கள் மதியைப் பயன்படுத்தத் தெரியாத மூடர்கள் என்று பகுத்தறிவில் மிகவும் பற்றுடையவராகக் காட்டிக் கொள்பவர்கள் கூறுவார்கள்.

அயோத்தி மாநகரை ஆட்சி செய்தவன் கன்மாடபாதன். தர்மமகாபிரபு. இந்நகரின் குருவான வசிஷ்டருக்கும், ராஜரிஷி விஸ்வாமித்திரருக்கும் கடும்பகை இருந்தது. ஒருமுறை கன்மாடபாதனை சந்திக்க வந்த விஸ்வாமித்திரர், ரிஷிகளுக்கென தனியாக தர்மசத்திரம் அமைக்க வேண்டினார். அதை ஏற்ற அரசன், அவ்வாறே செய்தான். ஒருமுறை அங்கு வசிஷ்டர் தர்மம் கேட்டு வந்தார். அவர் வந்த நேரத்தில், அவரது பரம எதிரியான விஸ்வாமித்திரர், அங்கிருந்த உணவுப் பொருட்களை பசுவின் கன்றுகளாக மாறும்படி செய்து விட்டார். தர்ம சத்திர அதிகாரி உள்ளே சென்றதும் இதைக் கண்டு அதிர்ந்தார். செய்வதறியாது விழித்த அவர், இதைச் சொன்னால் வசிஷ்டர் நம்புவாரோ மாட்டோரோ என்றெண்ணி, அவசர அவசரமாக ஒரு கன்றை சமைத்து படைத்து விட்டார்.

சாப்பாட்டின் முன் அமர்ந்ததுமே, கெட்ட வாடை வீசியதால், கோபமடைந்த வசிஷ்டர் நேராக அரசனிடம் சென்றார். கன்றை சமைத்து உணவிட்டதற்காக அவனை நரமாமிசம் தின்னும் ராட்சஷன் ஆகும்படி சபித்தார். தவறே செய்யாத அரசன் விதியின் பிடியில் சிக்கி, அறியாமல் நடந்த சம்பவத்துக்காக, சாப விமோசனம் கேட்டான். வசிஷ்டர் பதில் பேசாமல் போய்விட்டார். அரசனின் உருவம் விகாரமாகி விட்டது. அவன் நாட்டை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்கு போய், சாப விமோசனம் பெறுவதற்காக யாகம் ஒன்றைத் துவங்குவதற்காக எமதர்மராஜாவை நோக்கி தவமிருந்தான். எமன் வந்தார். வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள் கொடுத்த சாபம், என்னை நினைத்து செய்யப்படும் யாகத்தால் சரியாகாது என எமன் சொல்ல ராட்சஷ ராஜாவுக்கு கோபம் வந்து விட்டது. எமனுடன் போராட்டத்தை துவக்கி விட்டார். எமனே! நீ பொய் சொல்கிறாய். நீ தான் உலகில் வாழ்பவர்களின் ஆயுள்காலத்தை நிர்ணயிப்பவன். உன்னால், முடியாதது ஏதுமில்லை. நீ என்னை சோதிக்க நினைத்தால், அச்சோதனைகளில் வெல்வேன், என்றான். எமன் எவ்வளவோ சொல்லியும் ராஜா கேட்கவில்லை. அவனுடன் யுத்தம் செய்து வென்று, எமலோகத்திற்கு தான் அரசனாகி, யாகத்தை நிறைவேற்றப் போவதாக கூறினார். இருவரும் யுத்தத்தை தொடங்கினர். எமன், தன் கையிலிருந்த தெய்வாம்சம் பொருந்திய சூலம் ஒன்றை ராஜா மீது எய்தான்.

ராஜா தர்மத்துக்கு அதிபதியான அந்த எமனையே வணங்கி, எமனே! தர்மத்துக்கு நீயே அதிபதி. நான் செய்த தர்மங்கள் உண்மை என்பது நிச்சயமானால், நீ எறிந்த இந்த சூலம், நொறுங்கி சுக்கு நூறாகட்டும், என்றான். சொன்னது போலவே சூலம் நொறுங்கியது. எமதர்மன் இதைக் கண்டு மனம்கலங்கி, ராஜாவுடன் மல்யுத்தம் செய்தான். அதிலும் ராஜா பிடி கொடுக்கவில்லை. பின்னர் அவனது ஆலோசனைப்படி, கன்மாடபாதனே! உன் சாபத்தை என்னால் தீர்க்க இயலாது. இதை தீர்க்கவல்லவர் விஸ்வாமித்திரர் மட்டுமே, என்று புதிருக்கான விடையை அவிழ்த்தான். பின்னர், கன்மாடபாதன் விஸ்வாமித்திரரை தேடிச் சென்று வணங்கினான். விஸ்வாமித்திரர் அவனிடம், நீ வசிஷ்டரின் நூறு பிள்ளைகளையும் விழுங்கி விடு. உனக்கு நரமாமிசம் சாப்பிடும் சாபத்தை அவர் தானே தந்தார்! அவரே அதற்குரிய வினையை அனுபவிக்கட்டும். அவ்வாறு செய்வதால், மேலும் அவரது கோபத்திற்கு ஆளாவோயோ என எண்ண வேண்டாம். ஏனெனில் அவரது சாபம் அவரையே தாக்குகிறது. வினை செய்தவர்கள் வினையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். பிறகு என்னிடம் வா. சாபத்தை நானே நீக்கி விடுகிறேன், என்றார். அரசனும் அவ்வாறே செய்து விட்டு, விஸ்வாமித்திரரிடம் ஓடினான். அவர் அவனிடம், ஒரு காலத்தில் வசிஷ்டர் என் பிள்ளைகளை சாம்பலாகும்படி சபித்தார். அதுபோல, இப்போது அவரது பிள்ளைகளும் மாண்டு போனார்கள். என் பழி உன்மூலம் தீர்ந்தது. உனக்கு விமோசனம் பெற்றுத் தருகிறேன், எனக் கூறி, காட்டிலேயே சிவலிங்க பிரதிஷ்டை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சிவனை வரவழைத்தார் விஸ்வாமித்திரர். சிவதரிசனம் கண்டு, அரசனுக்கும் எல்லையற்ற ஆனந்தம். அவன் சாபம் நீங்கப்பெற்று, சுயரூபம் பெற்றான். மீண்டும் நாடு சென்று மகனோடு நீண்டகாலம் இனிது வாழ்ந்து கைலாயத்தை அடைந்தான்



கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்