கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 24 நவம்பர், 2013

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் உன் தகுதியை நீயே உரக்கச் சொல்



எப்படி? வாய்ப்புகள் தாமே வராது. நாம்தான் உருவாக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடவே முடியாது. வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள். நாமும் சாதனையாளர்களாக முயற்சி செய்வோம்.

நீ முடியாது என்று சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டு தான் இருக்கிறான். எவன் தலையிலும் எழுதப்படவில்லை, ‘இவன் தான் சாதிக்கப் பிறந்தவன்’ என்று. நீ சாகப் பிறந்தவன் அல்ல. சாதிக்கப் பிறந்தவன். “நமக்கு பாதகமான ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சாதகமான ஏதோ ஒன்று இருக்கிறது” என்பதை உணர்ந்து கொண்டால் நம் மனம் ராக்கெட் போல் மேலே சென்று கொண்டே இருக்கும்.

Always do not wait for your second opportunities, because it may be hardened than the First One (Dr. APJ Abdul Kalam). “எப்போதும் இரண்டாம் வாய்ப்புக்காக காத்திருக்காமல் முதல் வாய்ப்பிலே செயலினை முடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் இரண்டாம் வாய்ப்பு முதல் வாய்ப்பை விடவும் கடினமாக இருக்கக்கூடும்” என்று சொல்லி இருக்கிறார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.

சாதனை கனவுகள் ஒரே நாளில் நிகழ்வதல்ல. ஒரு நாளில் நிச்சயம் முடியும். நீந்துங்கள் அல்லது மூழ்குங்கள், கரையிலே நிற்பது எதற்கும் உதவாது.

So many people can be responsible for your success. But only you are responsible for your failure. சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுசுறுப்புடனும் உத்வேகத்துடனும் வைத்திருக்கின்றன. எனவே பிரச்சனையை எதிர்கொண்டால் தான் வாழ்க்கை வசப்படும். நம்மிடம் உள்ள ஆற்றல் தனித்திறமை, உழைப்பு, இவை வெளிப்பட்டால்தான் நாம் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நின்று ஜெயிக்க முடியும்.

பலம் + பலகீனம் = மனிதன். நம்மிடம் உள்ள பலகீனங்களை அறிந்து அவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும். பணக்காரனுடன் உறவாடினால் பணக்காரன் ஆக மாட்டாய். ஆனால் அறிஞருடன் உறவாடினால் நீயும் அறிஞனாவாய்.

“தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்” (டார்வின்). எனவே நம் தகுதியை உயர்த்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே” (ஜூலியஸ் சீசர்). நன்னூலிலும், ‘உன் பெருமையை நான்கு இடங்களில் கூறால் அது தற்பெருமை ஆகாது’ என்று சொல்லப்பட்டுள்ளது.

அலுவலகம் என்பது பணம் கொடுக்கும் கேந்திரமாக இல்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் தங்கத்தட்டில் வைத்து உன் முன் நீட்டப்படாது. அதற்காக போராட வேண்டும். வாழும் ஒவ்வொரு வினாடியும் வாழக் கற்றுக்கொள்வோம். ஏனெனில் வாழ்க்கை ஒரு பொக்கிஷம். நீ பலமுள்ளவனாக விரும்பினால் உன் பலவீனங்களைத் தெரிந்து கொள்.

“படிக்கும் பழக்கம் முழுமையான மனிதனை உருவாக்கும்” (கார்லைஸ்). படிப்பதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம். எந்த பணியில் இருந்தாலும் பேச்சுத்திறன் அவசியம். சொல்லின் வல்லவரானால் நம்மைப் பற்றிய நல்ல மதிப்பீடுகளை உருவாக்கிவிடலாம். பிறரை பாராட்ட வேண்டும் என்று உள் மனம் நினைத்தாலும் தயக்கம் நம்மைத் தடுத்துவிடும். பிறர் சிறப்பினையும் உதவியினையும் பாராட்டுங்கள். அதுவும் உடனடியாக பாராட்டுங்கள். பாராட்டப்படுவீர்கள்.

வெற்றியின் விலாசம் விசாலம் – விடாமுயற்சி. கனவுகளும், கற்பனைகளும் வெற்றிக்கு முதல்படி. பொறுமை அறிவின் அணிகலன். “பொழுதை பொன்னாக்கு” என்பது கரிச்சான் குஞ்சுவின் புகழ்பெற்ற வாக்கியம். நேரத்தைத் திட்டமிட்டு பயனுள்ளதாக கழிப்போம். நாளைய தினத்தை இன்றே படைத்திடுவீர்.

கூப்பிடும் தூரத்தில் தான் குவிந்து கிடக்கிறது வாய்ப்பு. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறப்போடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.

வாழ்வோம் சாதிப்போம்

வரலாற்றில் இடம் பிடிப்போம்